தேர்தல் பணிக்கு புதிய மொபைல் ஆப்

 தமிழக சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில்தேர்தல் பணிக்கு நவீன தொழில் நுட்பங்களை பயன்படுத்ததேர்தல் கமிஷன் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

தமிழக சட்டசபைக்குமே, 25க்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும்எனவேமார்ச்சில் தேர்தல் தேதி அறிவிக்கப்படும் எனஎதிர்பார்க்கப்படுகிறதுஅதற்கேற்ப தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளையும்தேர்தல் கமிஷன் செய்து வருகிறதுபயிற்சி வகுப்புகொரோனா காரணமாகஒருஓட்டுச்சாவடியில், அதிகபட்சம், 1,000 வாக்காளர்கள் மட்டுமே ஓட்டளிக்க வேண்டும் என, தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.

 

எனவேகூடுதலாக, 23 ஆயிரம் ஓட்டுச் சாவடிகள் அமைக்கும் பணி நடந்து வருகிறதுஓட்டுச்சாவடிகள் எண்ணிக்கை அதிகரிப்பதால்தேர்தல் பணியில் கூடுதல் பணியாளர்கள்போலீசாரை ஈடுபடுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதுஅத்துடன்ஓட்டுப்பதிவு இயந்திரங்களும் கூடுதலாக தேவை.இவற்றை மாவட்ட வாரியாக கணக்கிட்டுதேவையான ஓட்டுப்பதிவு இயந்திரங்கள்மஹாராஷ்டிராமத்திய பிரதேசம் போன்ற மாநிலங்களில் இருந்து வரவழைக்கப்பட்டு உள்ளனஅவற்றை சரி பார்க்கும் பணி நடந்து வருகிறது.

 

தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்குநான்கு நாட்கள் பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டுள்ளதுவேட்பு மனுக்கள் பரிசீலனையின் போதுகடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள்தேர்தல் வழக்கு வராத வகையில்மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்துஅவர்களுக்கு விளக்கப் பட்டுள்ளது.விரைவில்உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள்ஓட்டுச்சாவடி அலுவலர்கள் போன்றோருக்குபயிற்சி அளிக்கப்பட உள்ளது.

 

எந்த தேர்தலிலும் இல்லாத வகையில்இந்த தேர்தலில்நவீன தொழில்நுட்பங்களை பயன் படுத்தவும்தேர்தல் கமிஷன் நடவடிக்கை எடுத்துள்ளது.பழுதுமுதற்கட்டமாகஓட்டுச்சாவடி அலுவலர்களுக்காகதனி, 'மொபைல் ஆப்உருவாக்கும் பணி நடந்து வருகிறதுஇந்த மொபைல் ஆப் வழியேஎந்த ஓட்டுச்சாவடிகளில்ஓட்டுப்பதிவு துவங்கி உள்ளதுஎங்கு ஓட்டுப்பதிவு இயந்திரங்களில்பழுது ஏற்பட்டுள்ளது.

 


ஒவ்வொரு ஓட்டுச்சாவடியிலும்ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறைஎவ்வளவு ஓட்டுகள் பதிவாகி உள்ளன என்ற விபரங்களைமாவட்ட தேர்தல் அலுவலர்கள் உடனுக்குடன் அறிந்து கொள்ள முடியும்.ஓட்டுச்சாவடி அலுவலர்ஓட்டுச்சாவடி தொடர்பான தகவல்களைமொபைல் ஆப் வழியேஉயர் அலுவலர்களுக்கு உடனுக்குடன் தெரிவிக்க முடியும்.இந்த மொபைல் ஆப்பில் எந்த விதமான விபரங்களை சேர்க்கலாம் எனஅனைத்து மாவட்ட தலைமை தேர்தல் அதிகாரிகளிடம்தேர்தல் கமிஷன் கருத்து கேட்டுள்ளது.