
தேசிய பெண் குழந்தைகள் தினம் நேற்று இந்தியாவில் கொண்டாடப்பட்டது. இந்த நல்ல நாளில் பெண் பிள்ளைகளை கவுரவிக்கும் விதமாக சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே மிளகனுர் அரசு உயர்நிலைப்பள்ளியில் படித்துவரும் மாணவி ஒருவருக்கு, ஒருநாள் தலைமையாசிரியர் பதவி கொடுக்கப்பட்ட சம்பவம் அனைவர் மத்தியிலும் பாராட்டை பெற்றுவருகிறது.
மொத்தம் 75 மாணவ,
மாணவிகள் படிக்கும் இந்த பள்ளியில் 7 ஆசிரியர், ஆசிரியைகள் வெளிப்பார்த்துவருகின்றனர். இந்த பள்ளியில் படிக்கும் மாணவிகளில் பேச்சுப்போட்டி, கட்டுரைப்போட்டி, வருகைப் பதிவு, சக மாணவ, மாணவியர்களிடம் பழகும் மனப்பான்மை, பிறருக்கு உதவி செயதல் போன்றவற்றில் சிறந்து விளங்கிய 10 ஆம் வகுப்பு படித்துவரும் காவ்யா என்ற மனைவியை தேர்வு செய்து அவரை பள்ளி தலைமை ஆசிரியராக அமரவைத்தனர்.