வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது சந்திரயான்-2 விண்கலம்! விஞ்ஞானிகள் மகிழ்ச்சி!!

நிலவில் ஆய்வை மேற்கொள்ளவிருக்கும் சந்திரயான்-2 விண்கலம், அதிக
திறன்கொண்ட ஜி.எஸ்.எல்.வி. மார்க் 3-எம்1 ராக்கெட் மூலம் இன்று பிற்பகல் 2.43 மணிக்கு விண்ணில் பாய்ந்தது.
இதற்கான 20 மணி நேர கவுன்ட் - டவுன் ஞாயிற்றுக்கிழமை காலை 6.51 மணிக்குத் தொடங்கி திங்கட்கிழமை பிற்பகல் 2.43க்கு நிறைவடைந்தது. சந்திரயான்-2 வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்ததை அடுத்து விண்வெளி விஞ்ஞானிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
விண்ணில் ஏவப்பட்ட சந்திரயான்-2 விண்கலம் புவி வட்டப்பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டுள்ளதை அடுத்து விஞ்ஞானிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவன் விண்வெளி ஆய்வு மையத்தின் இரண்டாவது ஏவு தளத்திலிருந்து திங்கள்கிழமை பிற்பகல் 2.43 மணிக்கு சந்திரயான்-2 விண்கலம் வெற்கிரமாக ஏவப்பட்டது.
விண்ணில் பாய்ந்துள்ள சந்திரயான்-2 பூமியைச் சுற்றி வந்த பிறகு, நிலவை நோக்கி நீள் வட்டப் பாதையில் பயணிக்கும்.