சட்டக்கல்லூரி விண்ணப்பம் வினியோகம் துவங்கியது

சென்னை,சட்ட கல்லுாரிகளில் 2952 இடங்களில் மாணவர்களை சேர்ப்பதற்கான
விண்ணப்ப வினியோகம் நேற்று துவங்கியது.தமிழ்நாடு அம்பேத்கர் சட்ட பல்கலை இணைப்பில் சென்னையில் சீர்மிகு சட்ட பள்ளியும் 10 அரசு கல்லுாரிகளும் இரண்டு தனியார் கல்லுாரிகளும் செயல்படுகின்றன. இந்த கல்லுாரிகளில் மூன்றாண்டு படிப்புக்கு 1541 இடங்களுக்கும் ஐந்தாண்டு படிப்புக்கு 1411 இடங்களுக்கும் மாணவர் சேர்க்கை நடக்க உள்ளது.ஐந்தாண்டு படிப்புக்கான விண்ணப்ப வினியோகம் நேற்று துவங்கியது; வரும் 31ம் தேதி வரை விண்ணப்பம் வழங்கப்படும். மாணவர்கள் தமிழ்நாடு அம்பேத்கர் சட்ட பல்கலை மற்றும் அரசு சட்ட கல்லுாரிகளுக்கு நேரில் சென்று விண்ணப்பத்தை பெறலாம்.மேலும் tndalu.ac.inஎன்ற இணையதளத்திலும் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்யலாம். வரும் 31ம் தேதிக்குள் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து தர வேண்டும். மூன்றாண்டு பட்டப் படிப்புக்கு ஜூன் 28 முதல் ஜூலை 26 வரை விண்ணப்பங்கள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.