ஒடிஸாவில் மே 20-ஆம் தேதி நீட் தேர்வு

ஒடிஸாவில் மே 20-ஆம் தேதி நீட் தேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான தேசிய தகுதி காண் நுழைவுத் தேர்வு (நீட்) நாடு முழுவதும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதனை, தமிழகத்தில் 1.34 லட்சம் பேர் எழுதியதாக தகவல்கள் வெளியானது.
ஆனால், ஃபானி புயல் காரணமாக ஒடிஸாவில் மட்டும் நீட் தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. ஒடிஸாவில் மறுசீரமைப்புப் பணிகள் நிறைவடைந்த பிறகே அங்கு தேர்வு நடத்தக் கூடிய நிலை இருந்தது. அதனால், நீட் தேர்வு முடிவுகள் வெளியாவதில் தாமதம் ஏற்படலாம் என்றும் எதிர்பார்க்கப்பட்டது.
இந்நிலையில், ஒடிஸாவில் வரும் மே 20-ஆம் தேதி நீட் தேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.