போலியோ சொட்டு மருந்து முகாம் ஒத்திவைப்பு

தமிழகத்தில், ஒரே தவணையாக, பிப்., 3ல் நடைபெற இருந்த, போலியோ சொட்டு மருந்து முகாம், தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.இந்தாண்டு, 70 லட்சம் குழந்தைகளுக்கு, ஒரே தவணையாக, போலியோ சொட்டு மருந்து வழங்க, தமிழக பொது சுகாதாரத் துறை திட்டமிட்டுஇருந்தது.
ஆனால், அதற்கான முகாம், தேதி குறிப்பிடப்படாமல், ஒத்திவைக்கப்பட்டுள்ளது.விரைவில், இதற்கான தேதி அறிவிக்கப்படும் என, பொது சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.