CPS வட்டி உயர்வு

பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தின் கீழ், பிடித்தம் செய்யப்படும் தொகைக்கான வட்டி, உயர்த்தி அறிவிக்கப்பட்டுஉள்ளது.புதிதாக பணியில் சேர்ந்த, அரசு ஊழியர்களுக்கு, பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப் பட்டு உள்ளது. 


இத்திட்டத்தின் கீழ், பிடித்தம் செய்யப்படும் தொகைக்கு, ஜூலை, 1 முதல், செப்., 30 வரையிலான காலத்திற்கு, 7.6 சதவீதம் வட்டி நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது. தற்போது, அக்., 1 முதல், டிச., 31 வரையிலான காலத்திற்கு, 8 சதவீதம் வட்டி நிர்ணயம் செய்து, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கான அரசாணையை, நிதித்துறை செயலர், சண்முகம் வெளியிட்டுள்ளார்.