அரசு ஊழியர்களுடன் நாளை பேச்சுவார்த்தை

சென்னை: பழைய ஓய்வூதிய திட்டம் உள்ளிட்டவை குறித்து டிச.,4 முதல்
காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாக ஜாக்டோ ஜியோ அமைப்பினர் அறிவித்துள்ளனர்.
இந்நிலையில், அந்த அமைப்பினரை தமிழக அரசு பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளது. நாளை (நவ.,30) பிற்பகல் 2 மணியளவில் தலைமை செயலகத்தில் பேச்சுவார்த்தை நடக்கும் எனக்கூறப்படுகிறது.