புதிய தலைமைத் தேர்தல் ஆணையராக சுனில் அரோரா நியமனம்?

இந்திய தேர்தல் ஆணையத்தின் புதிய தலைமைத் தேர்தல் ஆணையராக சுனில்
அரோராவை குடியரசுத் தலைவர் நியமித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
சுனில் அரோரா, 1980-ஆம் ஆண்டு ராஜஸ்தான் பிரிவைச் சேர்ந்த இந்திய ஆட்சிப்பணி அதிகாரி ஆவார். இவர் நிதி, ஜவுளித் துறை மற்றும் திட்ட ஆணையம் உள்ளிட்ட அமைச்சகம் மற்றும் துறைகளில் பணிபுரிந்துள்ளார். அரசு அதிகாரியாக ஓய்வு பெற்ற இவர், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தேர்தல் ஆணையத்தில் சேர்க்கப்பட்டார்.
தற்போதைய தலைமைத் தேர்தல் ஆணையர் ஓ.பி.ராவத் பதவிக்காலம் வரும் டிசம்பர் 2-ஆம் தேதியுடன் நிறைவடைவதை அடுத்து குடியரசுத் தலைவர் சுனில் அரோராவை புதிய தலைமைத் தேர்தல் ஆணையராக நியமித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.