காஞ்சிபுரம் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு நாளை(அக்.31) விடுமுறை

காஞ்சிபுரம்: கனமழை காரணமாக நாளை(அக்.31) காஞ்சிபுரம் மாவட்டபள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.நாளை முதல் 5 நாட்களுக்கு கனமழை இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில் இம் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.


பருவமழை துவங்கியதையடுத்து தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருவதால் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.