பதிவுத்தபாலில் அனுப்பாத நோட்டீசை அரசு ஊழியர்கள் பெறக்கூடாது : 'ஜாக்டோ- ஜியோ' அறிவுரை

'பதிவுத்தபாலில் அனுப்பாத வேலை நிறுத்த விளக்க நோட்டீசை பெற்றுக்கொள்ளக் கூடாது', என ஜாக்டோஜியோ கூட்டமைப்பு சார்பில் அரசு
ஊழியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.




 கோரிக்கைகளை வலியுறுத்தி செப்.7 முதல் ஜாக்டோ-, ஜியோ அமைப்புசார்பில் அரசு ஊழியர்கள் தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.செப்.8ல் வேலைநிறுத்தத்தில் பங்கேற்ற ஆசிரியர்கள்அரசுஊழியர்களிடம் விளக்கம் கேட்டு அரசு சார்பில் 17 (விளக்கம் கேட்கும்குறிப்பாணைநோட்டீஸ் அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த நோட்டீசை உயர்நிலைமேல்நிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கு அந்தந்தபள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள்தொடக்கக் கல்வித் துறையில் உதவிதொடக்கக் கல்வி அலுவலர்கள் மூலம் ஒப்படைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.வருவாய்த் துறைவளர்ச்சித் துறைஅங்கன்வாடிசத்துணவு ஊழியர்களுக்கும்நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது.

இதனிடையே நேற்று மாவட்டங்களில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டஊழியர்களிடம் பேசியமாவட்ட 'ஜாக்டோ ஜியோஒருங்கிணைப்பாளர்கள்,விளக்க குறிப்பாணை நோட்டீசை தலைமை ஆசிரியரிடம் இருந்தோ,உயரதிகாரிகளிடம் இருந்தோ பெறக் கூடாது.


முறைப்படி பதிவுத் தபாலில் மட்டுமே பெற வேண்டும் எனஅறிவுறுத்தினர்.இதனால் அவர்களுக்கு நோட்டீஸ் தருவதில் காலதாமதம் ஏற்படவாய்ப்பு உள்ளதுஇதன் காரணமாக சம்பந்தப்பட்ட ஊழியர்களின் வீடுகளுக்குசென்று நோட்டீஸ் ஒட்ட அதிகாரிகள் தரப்பில் முடிவு செய்யப்பட்டது.

Image may contain: text