தொகுப்பூதியம் ரூ.40 உயர்வு

தொகுப்பூதியம் பெறும் பணியாளர்களுக்கு, மாதம், 20 முதல், 40 ரூபாய் வரை உயர்வு வழங்க, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. முறையான மற்றும் சிறப்பு காலமுறை ஊதியம் பெறும், அரசு அலுவலர்களுக்கு, ஜூலை, 1 முதல், அகவிலைப் படியை உயர்த்தி, அரசு உத்தரவிட்டுள்ளது. அதேபோல், தொகுப்பூதியம், நிலையான ஊதியம், மதிப்பூதியம் பெறுவோருக்கு, தனி உயர்வு வழங்க, அரசு முடிவு செய்தது.
அதன்படி மாதம், 600 ரூபாய் வரை, திருத்தப்பட்ட தொகுப்பூதியம், நிலையான ஊதியம், மதிப்பூதியம் பெறுவோருக்கு, மாதம், 20 ரூபாய்; 600 ரூபாய்க்கு மேல் பெறுவோருக்கு, மாதம், 40 ரூபாய், தனி உயர்வு வழங்கப்படும் என, அரசு அறிவித்துள்ளது.