மத்திய அரசு ஊழியர்களுக்கு வெள்ள நிவாரண உதவி?

மத்திய அரசின் சேவை வரித்துறை தலைமையகம், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தன் ஊழியர்களுக்கு, நிவாரணத் தொகை வழங்க பரிசீலித்து வருகிறது. ஊழியர்களிடம், பாதிக்கப்பட்ட உடைமைகளின் பட்டியல் பெறப்பட்டுள்ளது.



            இதன் அடிப்படையில், சென்னையில் உள்ள மத்திய கலால் அலுவலகத்தில், ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது. அதன் பரிந்துரைகள், டில்லிக்கு அனுப்பப்படும்; அதன் பின், மத்திய அரசு, நிவாரணத் தொகை பற்றி முடிவெடுக்கும் என, அந்த துறை வட்டாரம் தெரிவித்தது.