மத்திய அரசு ஊழியர்களுக்கு 6 சதவீதம் அகவிலைப்படி உயர்வு

மத்திய அரசு ஊழியர்களுக்கு 6 சதவீத அகவிலைப்படி உயர்வு வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

பிரதமர் நரேதிர மோடி தலைமையில் இன்று நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில் இதற்கான ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. தற்போது வழங்கப்பட்டு வரும் 113 சதவீதம் அகவிலைப்படியை 119 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. முன்னதாக ஏப்ரல் மாதம் மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி, 6 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது.
இதன் மூலம், 48 லட்சம் அரசு ஊழியர்களும், 55 லட்சம் ஓய்வூதியதாரர்களுக்கும் பயன்பெறுவார்கள் என்று தெரிகிறது.