TNPSC: குருப் 4 சான்றிதழ் சரிபார்ப்பு இன்று தொடக்கம் டிஎன்பிஎஸ்சி அலுவலகத்துக்குள் நுழைய கடும் கட்டுப்பாடு

குருப்4 சான்றிதழ் சரிபார்ப்பு இன்று தொடங்குகிறது. தேர்வாணைய அலுவலகத்திற்குள் விண்ணப்பதாரர் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. 

         தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்(டிஎன்பிஎஸ்சி) குரூப் 4 பதவியில் அடங்கிய இளநிலை உதவியாளர், தட்டச்சர்-1683, சுருக்கெழுத்து தட்டச்சர், வரித் தண்டலர், வரைவாளர், நில அளவர் உள்ளிட்ட 4963 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்து தேர்வை கடந்த டிசம்பர் 21ம் தேதி நடந்தியது.இதில், மதிப்பெண், தரவரிசை பட்டில் அடிப்படையில் 10,02,080 பேரின் ரிசல்ட் டிஎன்பிஎஸ்சி அண்மையில் வெளியிட்டது. இவர்களுக்கான நேர்காணல் இன்று தொடங்குகிறது. சென்னை பிராட்வேயில் உள்ள டிஎன்பிஎஸ்சி தலைமை அலுவலகத்தில் இந்த நேர்காணல் நடக்கிறது.ஒவ்வொரு நாளும் ரேங்க் அடிப்படையில் 200 பேர் நேர்காணல் தேர்வுக்கு அழைக்கப்பட்டுள்ளனர். இன்று தொடங்கும் நேர்காணல் ஆகஸ்ட் 3ம் தேதி வரை நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
இந்நிலையில், டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ள அறிவிப்பில், “சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வுக்கு வரும் விண்ணப்பதாரர்கள் மட்டுமே ேதர்வாணைய அலுவலகத்தினுள்அனுமதிக்கப்படுவர். அவர்களுடன் வரும் நபர்கள் எவரும் அனுமதிக்கப்பட மாட்டார்கள். எனினும் ைகக் குழந்ைதயுடன் வரும் ெபண் விண்ணப்பதாரர்களுடன் ஒரு நபரும் மாற்றுத்திறனாளி விண்ணப்பதாரர்களுடன் ஒரு நபரும் மட்டுேம அனுமதிக்கப்படுவார்கள்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.