மத்திய அரசு ஊழியர்களுக்கு 7 சதவீதம் டிஏ உயர்வு -தமிழக அரசு ஊழியர்களுக்கு எப்போது ?

மத்திய அரசு ஊழியர்களுக்கு 7 சதவீதம் அகவிலைப்படி (டிஏ)உயர்த்தப்பட்டதுபோல தங்களுக்கும் உயர்த்தப்படுமா என தமிழகஅரசு ஊழியர்கள்ஆசிரியர்கள் எதிர்பார்க்கின்றனர்மத்தியமாநிலஅரசு
ஊழியர்களுக்கு அடிப்படை சம்பளத்துடன்அகவிலைப்படியும் சேர்த்துவழங்கப்படுகிறது.

இந்த அகவிலைப்படி ஒவ்வொரு 6 மாதங்களுக்கு ஒரு முறைஉயர்த்தப்படுவது வழக்கம்ஜனவரி,ஜூலை ஆகிய மாதங்களில்அகவிலைப்படி உயர்வு அமல்படுத்தப்பட்டு வருகிறது.கடந்த ஜனவரிமாதம் முதல் ஜூன் மாதம் வரையிலான 6 மாதங்களுக்கு 100 சதவீதம்அகவிலைப்படி வழங்கப்பட்டு வந்தது.விலைவாசி உயர்வின்அடிப்படையில் அகவிலைப்படி மத்தியமாநில அரசு ஊழியர்களுக்குஉயர்த்தப்படும்இதன்படி ஜூலை 1ம் தேதி முதல் மத்திய அரசுஊழியர்களுக்கு வழங்கப்பட்டு வரும் அகவிலைப்படியை 7 சதவீதம்உயர்த்தி 107 சதவீதமாக மத்திய அரசு அதிகரித்தது.இதற்கானஅறிவிப்பு கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியானது.

மத்தியஅரசு அகவிலைப்படியை உயர்த்திய உடன் மாநில அரசுஊழியர்களுக்கு அந்தந்த மாநில அரசுகள் அகவிலைப்படியைஉயர்த்தி அறிவிக்கும்.தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்தைவிதிமுறைகள் அமலில் இருந்ததால் மாநில அரசு ஊழியர்களுக்குஅகவிலைப்படி உயர்வு தொடர்பான அறிவிப்பு வெளியாகவில்லை.தற்போது உள்ளாட்சி தேர்தல் முடிந்து வெற்றி பெற்றவர்கள் விவரம்வெளியாகி விட்டது.இதனால் தங்களுக்கு எப்போது அகவிலைப்படிஉயர்த்தப்படும் என மாநில அரசு ஊழியர்கள் மத்தியில் எதிர்பார்ப்புஉருவாகியுள்ளது.


தற்போது மாத கடைசி என்பதால்இந்த மாத ஊதியத்துடன்அகவிலைப்படி உயர்த்தி வழங்கப்படுமா என அரசு ஊழியர்கள்எதிர்பார்க்கின்றனர்.நவராத்திரிதீபாவளி பண்டிகை என அடுத்தடுத்துபண்டிகை காலம் வருகிறதுஎனவே தமிழகத்திலும் 7 சதவீதம்அகவிலைப்படியை உயர்த்தி இந்த மாத ஊதியத்துடன் வழங்கவும்,அகவிலைப்படி நிலுவைத்தொகையை சேர்த்து வழங்கவும் தமிழகமுதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரசு ஊழியர்கள்,ஆசிரியர்கள் எதிர்பார்க்கின்றனர்.