பள்ளி கல்வி இயக்குநர்பணியிடத்தை பள்ளி கல்வி கமிஷனராக தரம் உயர்த்தி, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

 பள்ளி கல்வி இயக்குநரின் பொறுப்புகள்..எஸ்., அதிகாரிக்கு வழங்கப்பட்டுள்ளன.தமிழக பள்ளி கல்வித் துறையை பொறுத்தவரைஅரசின் சார்பில் செயலர்அல்லது முதன்மை செயலர் செயல்படுவர்அவர்களின் கீழ் பல்வேறு பிரிவு இயக்குநர்கள் இயங்குவர்கடும்

போட்டிஅவர்களில் பள்ளி கல்வி இயக்குநர் என்ற பதவி மட்டுமே தலைமை பொறுப்பாக கருதப்படுகிறது.

 

 

 

அரசு தரப்பில் செயலராக ..எஸ்., அதிகாரி இருந்தாலும்பள்ளி கல்வி இயக்குநரே அதிகாரம் மிக்கவராக இருப்பார்.பெரும்பாலான நிர்வாக பணிகளுக்குபள்ளி கல்வி இயக்குநரே முடிவெடுப்பார்அவரது முடிவுக்கு அரசின் செயலர் ஒப்புதல் வழங்குவார்அதனால்பள்ளி கல்வி இயக்குநர் பதவிக்கு வரமற்ற இயக்குநர்களிடம் கடும் போட்டி உண்டு.இந்நிலையில்முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான புதிய அரசில் பல்வேறு துறைகளில் சீர்திருத்தங்கள் செய்யப்படுகின்றனஅந்த வரிசையில்பள்ளி கல்வி நிர்வாகத்தில் அதிரடி மாற்றம் செய்யப்பட்டுள்ளது.பள்ளி கல்வி இயக்குநர் கண்ணப்பனின் அனைத்து அதிகாரங்களும்பள்ளி கல்வி கமிஷனர் என்ற பதவிக்கு அதிரடியாக மாற்றப்பட்டுள்ளன.

 

பள்ளி கல்வி கமிஷனர் பொறுப்பில்டி.என்.பி.எஸ்.சி., செயலரான ..எஸ்., அதிகாரி நந்தகுமார் நியமிக்கப்பட்டு உள்ளார்.

 

சிலர் எதிர்ப்பு

 

 இவர்டி.என்.பி.எஸ்.சி.,யில் தேர்வு சீர்திருத்தங்களை ஏற்படுத்தியவர்குரூப் தேர்வு முறைகேடுகளில் வெளிப்படையான விசாரணைக்கு உத்தரவிட்டவர்ஆசிரியர் தேர்வு வாரியத்தில், 'டெட்தேர்வு முறைகேடுகளையும் கண்டுபிடித்தவர்.இவரது நேரடி நிர்வாகத்தின் கீழ்பள்ளி கல்வியின் இயக்குநர்கள் மற்றும் இணை இயக்குநர்கள் பணியாற்ற உள்ளனர்.

 

பள்ளிக்கல்விதொடக்க கல்விதேர்வுத்துறைமெட்ரிக் உள்ளிட்ட அனைத்து இயக்குநர்களும்கமிஷனரின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்படுகின்றனர்.இந்த சீர்திருத்தம் ஒரு தரப்பில் வரவேற்பையும்இன்னொரு தரப்பில் எதிர்ப்பையும் ஏற்படுத்தி உள்ளதுபள்ளி கல்வி இயக்குநர் நிர்வாகத்தை..எஸ்., அதிகாரிக்கு மாற்றக் கூடாது என ஆசிரியர்கள் சங்கத்தினர் சிலர் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.

 

ஆங்கிலேயர் ஆட்சியின் போது, 200 ஆண்டுகளுக்கு முன்பள்ளி கல்வி இயக்குநர் பதவி உருவாக்கப்பட்டதால்அதை மாற்றக் கூடாது என தெரிவித்துள்ளனர்.

 

 

பரிந்துரை கடிதம்

 

 ஆசிரியர்கள் மற்றும்அதிகாரிகள்தங்களின் பணி நியமனம்பதவி உயர்வுபென்ஷன்பணியிட மாற்றம் போன்றவற்றுக்குபள்ளி கல்வி இயக்குநரை சந்தித்துபரிந்துரை கடிதம் பெறுவர்இனி..எஸ்., அதிகாரிக்கு இந்த அதிகாரங்கள் வருவதால்அவரை ஆசிரியர்கள் மற்றும் சங்கத்தினர் எளிதில் அணுக முடியாது என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.