அரையாண்டு தேர்வு ரத்து; பள்ளி கல்வித்துறை முடிவு

 

சென்னை : பள்ளிகளை இன்னும் திறக்க முடியாததால்காலாண்டு தேர்வு மட்டுமின்றிதற்போதுஅரையாண்டு தேர்வையும் ரத்து செய்யபள்ளி கல்வித்துறை முடிவு செய்துள்ளது.

 

கொரோனா தொற்று காரணமாகநாடு முழுவதும் மார்ச்சில் பள்ளிகள்கல்லுாரிகள் மூடப்பட்டனஒன்று முதல், 10ம் வகுப்பு வரை தமிழகத்தில்ஆண்டு இறுதி தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன.பத்தாம் வகுப்பு மாணவர்களுக்குகாலாண்டுஅரையாண்டு தேர்வுகள் அடிப்படையில்தேர்ச்சி அறிவிக்கப்பட்டுமதிப்பெண் பட்டியல் வழங்கப்பட்டது.


பிளஸ் 1க்கு ஒரு தேர்வு ரத்து செய்யப்பட்டதுபிளஸ் 2வுக்கு மட்டும்அனைத்து தேர்வுகளும் நடத்தப்பட்டனகொரோனா தொற்று தொடர்ந்து பரவி வந்ததால்பள்ளிகளை திறந்து வகுப்புகளை நேரடியாக நடத்ததமிழக அரசு அனுமதி அளிக்கவில்லைஎனவேதனியார் பள்ளிகளில்ஆன்லைனில் வகுப்புகள் நடத்தப்படுகின்றனஅரசு பள்ளிகளுக்கு கல்வி, 'டிவிவழியே வீடியோ பாடங்கள் நடத்தப்படுகின்றனஇந்நிலையில்இந்த ஆண்டுக்கான காலாண்டு தேர்வுகள் நடத்தப்படவில்லைதனியார் பள்ளிகள் ஆன்லைனில் தேர்வுகளை முடித்துள்ளன.இதையடுத்துஇந்த மாதம் நடக்க உள்ள அரையாண்டு தேர்வுகளையும் ரத்து செய்யபள்ளி கல்வித்துறை முடிவு செய்துள்ளது.

 

வழக்கமாகவரும், 14ம் தேதி முதல் அரையாண்டு தேர்வுகள் நடத்தப்பட வேண்டும்பள்ளிகள் திறக்கப்படாததால்தேர்வுகளை நடத்த வேண்டாம் எனஅரசு பள்ளி தலைமை ஆசிரியர்களுக்குமுதன்மை கல்வி அலுவலர்கள் அறிவுறுத்தி உள்ளனர்தனியார் பள்ளிகள் மட்டும்விருப்பம் உள்ள மாணவர்களுக்குஇதுவரை நடத்தப்பட்ட பாடங்களுக்கு மட்டும்மாதிரி தேர்வாக நடத்தி கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாகஅதிகாரிகள் தெரிவித்தனர்.