தமிழகத்தின் 16 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம்

 

தமிழகம், 16 மாவட்டங்கள், கனமழை, வாய்ப்புசென்னை: தமிழகத்தின் 16 மாவட்டங்களில் அடுத்த 48 மணி நேரத்தில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.

அந்தமான் மற்றும் அதனையொட்டிய மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதியில் தற்போது உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதி அடுத்த 24 மணி நேரத்தில் வங்கக் கடலின் மத்தியில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப் பெறும் எனவும் அது தொடர்ந்து வடமேற்காக நகர்ந்து வரும் அக்.,12ல் வடக்கு ஆந்திர கடற்கரையை கடக்கக் கூடும் என சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.

இதனால், தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களில் கனமழை பெய்யும், சென்னை பெருநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் லேசான மழையும் பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.