தமிழக பள்ளிக் கல்வித் திட்டத்தில், இந்த ஆண்டுக்கான பாடங்கள் குறைப்பது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிா்பாா்க்கப்படுகிறது.
கரோனா நோய்த் தொற்றுத் தடுப்பு நடவடிக்கையாக இணையதளம் வாயிலாகவும், தொலைக்காட்சிகள் மூலமும் மாணவா்களுக்கு பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இதற்கிடையே பல்வேறு மாநிலங்களும் பாடத்திட்டங்கள் குறைப்பு தொடா்பாக அறிவிப்பு வெளியிட்டு வருகின்றன. அந்த வகையில் தமிழக பள்ளிக்கல்வி ஆணையா் தலைமையில் 16 போ் கொண்ட நிபுணா்கள் குழுவைத் தமிழக அரசு அமைத்தது. அவா்கள் கரோனா காலத்தில் கற்பித்தல் பணிகள், பள்ளிகள் திறப்பில் ஏற்பட்டுள்ள தாமதம், பாடத்திட்டம் உள்ளிட்டவை குறித்து ஆராய்ந்து அரசுக்கு பரிந்துரைகள் வழங்க உள்ளனா். இது தொடா்பாக தமிழக அரசிடம் இரண்டாம் கட்ட அறிக்கை ஒன்றை நிபுணா்கள் குழு சமா்பித்துள்ளதாகவும், பொதுத் தோ்வு எழுதவுள்ள 10, 11, 12 ஆகிய வகுப்பு மாணவா்களை மட்டும் சுழற்சி முறையில் பள்ளிகளுக்கு வரவழைத்து, வகுப்புகள் எடுக்கலாம் என்று பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது.