'NEET', 'JEE ' தேர்வு எழுதும் மாணவர்களுக்கு ம.பி., ஒடிசா, சட்டீஸ்கர் மாநிலங்களில் இலவச பஸ் வசதி


 போபால்: 'NEET', 'JEE' தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தேர்வு மையங்களுக்கு செல்வதற்கு இலவச பஸ் போக்குவரத்து வசதி செய்து தரப்படும் என ம.பி.,, சட்டீஸ்கர் மற்றும் ஒடிசா மாநில அரசுகள் அறிவித்துள்ளன.

கொரோனா அச்சம், மழை வெள்ளம் காரணமாக தேர்வுகள் எழுதும் மாணவர்களின் ம.பி., மற்றும் மாநில அரசுகள் இலவச பஸ் வசதியை ஏற்பாடு செய்துள்ளன. தேர்வு எழுதும் மாணவர்களுடன் வரும் பெற்றோரும் இலவசமாக அழைத்துச் செல்லப்படுவதுடன், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் தங்கும் வசதிகளும் ஏற்பாடு செய்து தரப்படும் என இரு மாநில அரசுகளும் அறிவித்துள்ளன. NEET தேர்வு செப்., 13 அன்றும் JEE தேர்வு செப்., 1 முதல் 6ம் தேதி வரையும் நடைபெற உள்ளது.