![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgUo2gcho3IHFTRV_WzCO6hVoF1OkqUF7fuHAqQFJ7wXulJQEcJTd31mCY1PWzNL1Whl_NMAQ1ZhT8oFtq3q8NNjnMAoS2VMGs612zp8s8D6H9tFjJBFqm2WVyJ89URtUK6QQCm1utKRi0/s320/76970092.jpg)
பொறியியல்
கலந்தாய்விற்கு சான்றிதழ் பதிவேற்றம் செய்த மாணவர்கள் மட்டுமே
கலந்தாய்விற்கு அழைக்கப்படுவர் என பொறியியல் சேர்க்கை செயலாளர்
புருஷோத்தமன் தெரிவித்துள்ளார்.
பொறியியல் படிப்பிற்கு கட்டணம் மற்றும் சான்றிதழ் பதிவேற்றம் செய்ய ஆகஸ்ட் 24 ஆம் தேதி கால அவகாசம் நீட்டிக்கப்பட்டது . இதனையடுத்து ஒரு லட்சத்து 60 ஆயிரத்து 834 மாணவர்கள் கலந்தாய்விற்கு பதிவு செய்துள்ளனர். இந்நிலையில், ஒரு லட்சத்து 31ஆயிரத்து 436 மாணவர்கள் பொறியியல் கலந்தாய்விற்கு கட்டணம் செலுத்தியுள்ளனர் . இவர்களில் ஒரு லட்சத்து 14 ஆயிரத்து 206 மாணவர்கள் மட்டுமே சான்றிதழ் பதிவேற்றம் செய்துள்ளனர் .இவர்களில், சான்றிதழ் பதிவேற்றம் செய்துள்ள மாணவர்கள் மட்டும் கலந்தாய்விற்கு அழைக்கப்படுவார்கள் என பொறியியல் சேர்க்கை செயலாளர் புருஷோத்தமன் தெரிவித்துள்ளார்.