செப்., 1 முதல் தமிழகத்தில் இபாஸ் ரத்து: பஸ்கள் ஓடும்; வழிபாட்டு தலங்கள் திறப்பு

 செப்., தமிழகம், இபாஸ், ரத்து,   பஸ்கள்,  வழிபாட்டு தலங்கள், திறப்புசென்னை: கொரோனாவை கட்டுப்படுத்துவதற்காக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு, பல்வேறு தளர்வுகளுடனும் செப்.,30 வரை, நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதன்படி, இபாஸ் முறை ரத்து செய்யப்படுவதாகவும், மாவட்டங்களுக்குள் பஸ்கள் இயங்கவும் தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. வழிபாட்டு தலங்களை திறக்க அனுமதித்துள்ளதுடன், ஞாயிற்றுகிழமைகளில் அமல்படுத்தப்படும் தளர்வில்லா ஊரடங்கும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக முதல்வர் இ.பி.எஸ்., வெளியிட்ட அறிக்கை : கொரோனா பரவலை கட்டுப்படுத்த அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு, பல்வேறு தளர்வுகளுடன் ஆக.,31 வரை நீட்டிக்கப்பட்டது. கடந்த 29 ம் தேதி கலெக்டர்களுடனும், மருத்துவ மற்றும் சுகாதார நிபுணர்களுடனும் நடத்தப்பட்ட ஆலோசனை அடிப்படையிலும், அமைச்சர்களுடன் நடந்த ஆலோசனையின் பேரிலும், தற்போதுள்ள ஊரடங்கு, பல்வேறு தளர்வுகளுடன் 30.9.2020 வரை நீட்டிக்கப்படுகிறது. எனினும், பொருளாதாரத்தை மீட்டெடுக்க வேண்டிய அவசியத்தை கருத்தில் கொண்டும், நோய் தொற்றின் தன்மையை கருத்தில் கொண்டும், தமிழகம் முழுவதும் நோய் கட்டுப்பாட்டு பகுதி தவிர மற்ற பகுதிகளில் ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட தளர்வுகளுடன், கீழ்காணும் பணிகளுக்கும் செப்.,1 முதல் அனுமதி அளிக்கப்படுகிறது.

1.தமிழகம் முழுவதும் இபாஸ் முறை ரத்து செய்யப்படுகிறது . எனினும், வெளிநாடு மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து விமானம், ரயில் மற்றும் இதர வாகனங்களின் மூலம் தமிழகத்திற்கு வருவதற்கு இபாஸ் முறை தொடரும். ஆதார், பயணச்சீட்டு, தொலைபேசி எண்ணுடன் இபாஸ் விண்ணப்பித்த அனைவருக்கும் கணினி மூலம் சுய அனுமதி உடனடியாக பெறும் வகையில் இ - -பாஸ் வழங்கப்படும்.வட்டத்திற்குள்ளான பொது மற்றும் தனியார் பஸ் சேவை, சென்னையில் பெருநகர போக்குவரத்து சேவை 1.9.2020 முதல் வழிகாட்டு நெறிமுறைகளுடன் செயல்பட அனுமதிக்கப்படுகிறது.

4. சென்னை மெட்ரோ ரயில் சேவை செப்.,7 முதல் இயக்கப்படும்.

5.வணிக வளாகங்கள், அனைத்து ஷோரூம்கள் மற்றும் பெரிய கடைகள் 100 சதவீத பணியாளர்களுடன் மத்திய அரசின் குளிர்சாதன வசதி குறித்த வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றியும் நிலையான வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றியும் இயங்க அனுமதிக்கப்படுகிறது. எனினும், வணிக வளாகங்களில் உள்ள திரையரங்குகள் இயக்க தடை தொடரும்

6. சென்னை உட்பட தமிழகம் முழுவதும் அனைத்து கடைகளும் இரவு 8:00 வரை இயங்க அனுமதிக்கப்படும்.

7. அரசால், ஏற்கனவே நிலையான வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றி, உணவகங்கள் மற்றும் தேநீர் கடைகள் காலை 6:00 மணி முதல் இரவு 8:00 வரை இயங்க அனுமதிக்கப்படுகிறது. பார்சல் சேவை இரவு 9 மணி வரை இயங்க அனுமதி

8. சென்னை உட்பட தமிழகம் முழுவதும் உள்ள தொழிற்சாலைகள் மற்றும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் 100 சதவீத பணியாளர்களுடன் இயங்க அனுமதிக்கப்படுகிறது. எனினும், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் தவிர்க்க இயலாத பணிகள் மேற்கொள்ளும் பணியாளர்களை தவிர பிற பணியாளர்களை வீட்டில் இருந்தே பணிபுரிய ஊக்குவிக்க கேட்டு கொள்ளப்படுகிறார்கள்

9. தூங்கும் வசதியுடன் கூடிய ஓட்டல்கள், ரிசார்ட்கள், கேளிக்கை விடுதிகள் மற்றும் பிற விருந்தோம்பல் சேவைகள் நிலையான வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றி இயங்க அனுமதிக்கப்படுகிறது.

10. உடற்பயிற்சி மற்றும் அனைத்து விளையாட்டு பயிற்சிகளுக்காக பூங்காக்கள் மற்றும் விளையாட்டு மைதானங்கள் நிலையான வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றி திறக்க அனுமதிக்கப்படுகிறது எனினும், விளையாட்டுமைதானங்களில் பார்வையாளர்களுக்கு அனுமதி கிடையாது.

11. திறன் மற்றும் தொழில் பயிற்சி நிறுவனங்கள் நிலையான வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றி 21.9.2020 முதல் திறக்கலாம்

12. தற்போது 50 சதவீத பணியாளர்களுடன் இயங்கும் அரசு அலுவலகங்கள், செப்.,1 முதல் 100 சதவீத பணியாளர்களுடன் இயங்கும். எனினும் தனியார் மற்றும் அரசு அலுவலகங்களில், தொழிற்சாலை போன்ற பணியிடங்களிலும், கொரோனா தடுப்பு அலுவலர் ஒருவரை தொடர்பு அலுவலராக நியமித்து, முறையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றுவதையும், நோய் தொற்று உள்ளவர்கள் அலுவலகத்திற்கு வருவதை தவிர்க்கவும், அறிகுறி உள்ளவர்களை உடனுக்குடன் பரிசோதனை செய்வதை உறுதிபடுத்தவும் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்

13. வங்கிகள் மற்றும் அதை சார்ந்த நிறுவனங்கள் 100 சதவீத பணியாளர்களுடன் இயங்குவதற்கு அனுமதிக்கப்படுகிறது.

14. நீலகிரி மாவட்டம், கொடைக்கானல் மற்றும் ஏற்காடு போன்ற மலை வாசஸ்தலங்களுக்கும், வெளியூர் சுற்றுலா பயணிகள் செல்வதை கட்டுப்படுத்த மாவட்ட கலெக்டர் அனுமதியுடன் இபாஸ் பெற்று செல்ல அனுமதிக்கப்படுவார்கள்.

15. திரைப்பட தொழிலுக்கான படப்பிடிப்புகளுக்கு உரிய வழிகாட்டி நெறிமுறைகள் உட்பட்டு ஒரே சமயத்தில் 75 நபர்களுக்கு மிகாமல் பணி செய்ய அனுமதி அளிக்கப்படுகிறது. படப்பிடிப்பின் போது பார்வையாளர்களுக்கு அனுமதி கிடையாது.

16. ஞாயிற்றுகிழமைகளில் அமல்படுத்தப்பட்டு வந்த முழு ஊரடங்கு செப்., மாதம் முதல் ரத்து செய்யப்படுகிறது.

17. மாநிலங்களுக்கு இடையிலான ரயில் போக்குவரத்து அனுமதிக்கப்பட்ட தடங்களில் மட்டும் செயல்படும். எனினும், மாநிலத்திற்குள் பயணியர் ரயில்கள் செயல்பட செப்.,15 வரை அனுமதியில்லை. 15ம் தேதிக்கு பிறகு, தமிழகத்திற்குள் பயணியர் ரயில்கள் அனுமதிப்பது பற்றி சூழ்நிலைக்கு ஏற்ப முடிவு செய்யப்படும்

18. விமான போக்குவரத்து மூலம் பயணிக்கும் வெளிநாட்டு பயணிகள் மற்றும் உள்ளூர் பயணிகள், ரயில் போக்குவரத்து மூலம் பயணிக்கும் பிற மாநில பயணிகள், தனிமைபடுத்துதல் மற்றும் கொரோனா தொற்றை கண்டறிதலுக்கான புதிய நடைமுறை வெளியிடப்படும்.

19, தற்போது சென்னை விமான நிலையத்தில் வெளி மாநிலங்களில் இருந்து 25 விமானங்கள் தரையிறங்க அனுமதித்துள்ள நிலையில், இனி 50 விமானங்கள் வரை தரையிறங்க அனுமதிக்கப்படுகிறது. இதுதவிர கோவை, திருச்சி, மதுரை, தூத்துக்குடி, சேலம் ஆகிய விமான நிலையங்களில் விமானங்கள் தரையிறங்க தற்போது அனுமதிக்கப்பட்டுள்ள நிலை தொடரும்.


பொதுவான விதிமுறைகள்


* மாநிலம் முழுவதும் குற்றவியல் நடைமுறை சட்டம் 144ன் கீழ் பொது இடங்களில் 5 நபர்களுக்கு மேல் கூடக்கூடாது என்ற தடை உத்தரவு தொடரும்.

* தமிழகம் முழுவதும் நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் தற்போதுள்ள நடைமுறைகளின்படி எந்தவிதமான தளர்வுகளுமின்றி ஊரடங்கு முழுமையாக கடைபிடிக்கப்படும்.


ஏற்கனவே நடைமுறையில் உள்ள கீழ்காணும் செயல்பாடுகளுக்கான தடைகள் மறு உத்தரவு வரும் வரை தொடரும்



* பள்ளிகள், கல்லூரிகள், ஆராய்ச்சி நிறுவனங்கள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்கள். எனினும், இந்நிறுவனங்கள் இணைய வழி கல்வி கற்றலை தொடர்வதுடன் அதனை ஊக்குவிக்கலாம்

* திரையரங்குகள், நீச்சல் குளங்கள், பொழுது போக்கு பூங்காக்கள், பெரிய அரங்குகள், கூட்ட அரங்குகள் கடற்கரை, உயிரியல் பூங்காக்கள், அருங்காட்சியகங்கள் சுற்றுலா தலங்கள் போன்ற பொது மக்கள் அதிகம் கூடும் இடங்கள்

* மத்திய உள்துறை அமைச்சகத்தால் அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களை தவிரவ சர்வதேச விமான போக்குவரத்திற்கான தடை நீடிக்கும்

* புறநகர் மின்சார ரயில் போக்குவரத்து

*மதம்சார்ந்த கூட்டங்கள், சமுதாய, அரசியல், பொழுதுபோக்கு, கலாசார நிகழ்வுகள், கல்வி விழாக்கள், பிற கூட்டங்கள் மற்றும் ஊர்வலங்கள் நடத்த உள்ள தடை தொடரும்.

பொது மக்கள் வெளியில் செல்லும் போதும், பொது இடங்களிலும் மாஸ்க் அணிவது கட்டாயம். பொது மக்கள் வீட்டிலும், பணிபுரியும் இடங்களிலும் அடிக்கடி சோப்பை பயன்படுத்தி கைகழுவுவதையும், வெளியிடங்ளில் மாஸ்க் அணிந்து செல்வதையும், சமூக விலகலை தவறாமல் கடைபிடித்து அவசிய தேவை இல்லாமல் வெளியில் செல்வதையும் தவிர்த்து அரசுக்கு முழு ஒத்துழைப்பு வழங்கினால், நோய் தொற்றை கட்டுப்படுத்த முடியும்.

பொது மக்கள் அரசு எடுத்து வரும் முயற்சிகளுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். நோய் தொற்றின் போக்கு தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு, மக்களின் ஒத்துழைப்பையும், நோய் தொற்றின் நிலையையும் கருத்தில் கொண்டு அவ்வபோது தேவைக்கு ஏற்ப மேலும் தளர்வுகள் வழங்கப்படும். இவ்வாறு முதல்வர் தெரிவித்துள்ளார்.