![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgnpEP5gAL16LhGFmKy8tOqKbwXuc8sZFEYyQcUSdR3AeKQ8mrb4kysJxvjfcwGqZ5Xx9IXreTzcSbCViCvYwRWvk83mWKOCPJsOk4z4FbIMvOIzXopwK0rwBFUWjI9NJNIsjbCSjMh5Ntb/s640/FB_IMG_1594289347394.jpg)
மூன்றாம் பாலினத்தினருக்கு( TRI GENDER) அரசுப்பணியில் பட்டியலினத்தவருக்கு நிகரான வயதுவரம்பு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
.........................................................................
சமூக
செயற்பாட்டாளர் கிரேஸ் பானு அவர்களது பதிவு.
தேனிமாவட்டத்தை சேர்ந்த திருநங்கை ஆராதனா என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த காவலர் பணிகோரி தொடர்ந்த வழக்கின் அடிப்படையிலும் உச்சநீதிமன்றதின் நால்சா vs இந்தியா 2014 ல் வழங்கிய தீர்ப்பின் அடிப்படையிலும் 26.ஜூன்2020 அன்று தமிழ்நாடு சீருடை பணியாளர் ஆணையம் இனிவரும் காலங்களில் மாற்றுபாலினத்தை சார்ந்தவர்களுக்கு பட்டியலின மக்களை போல வயதுவரம்பை தளர்த்தி
ஆணை விடுத்துள்ளது ..இது மிகவும் மகிழ்ச்சியான மேலும் ஒருபடி சமூக முன்னேற்றத்திற்கான வழி. அதேநேரத்தில் மாற்றுபாலினத்தவர்களும் பட்டியிலனத்தவர்களும் ஒன்றல்ல . நாங்கள் சமூக,பொருளியல் ,பாலின ரீதியில் எல்லோரையும் விட மேலதிமாக ஒடுக்கப்படுகிறவர்கள் .கற்கும் வயதில் பாலின தீண்டாமை கொடுமைகளை எதிர்கொண்டு, கல்வி இடைநிற்றலை அனுபவிக்கும் எம்சமூகத்தவற்கு மேலதிக வயது வரம்பு வேண்டும். தனிதனியாக சட்டபோராட்டம் நடத்திதான் மாற்றுபாலினத்தவர்கள் இலக்கை அடைய வேண்டுமெனில் அதற்கு நூற்றாண்டு
போதாது .உச்சநீதிமன்ற வழிகாட்டலின்படி மாநில அரசாங்கங்கள் கல்வி,வேலைவாய்ப்பில் இடப்பங்கீடு வழங்குவதே எம் சமூகத்தவர் நீதிமன்றவாயில்களில் அல்லாமல் கல்வி,வேலைவாய்ப்பின் வாயில்களை நேரடியாக நுழைவதற்கு வழியாகும்.