ஈரோடு : ''ஆகஸ்ட் முதல் வாரத்தில், எஸ்.எஸ்.எல்.சி., மதிப்பெண் சான்று
வழங்க, நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது,'' என, பள்ளிக்கல்வித் துறை
அமைச்சர், செங்கோட்டையன் கூறினார்.
ஈரோடில், நேற்று அவர் கூறியதாவது: பள்ளிகள் திறப்பு குறித்து, மத்திய அரசு அறிக்கை கேட்டுள்ளது. வரும் மாதம் அல்லது செப்., மாதம் திறக்கலாமா என கேட்டுள்ளனர். தற்போது, கொரோனா பரவல், பல மாவட்டங்களில் அதிகமாக உள்ளது. எனவே, அதை கட்டுக்குள் கொண்டு வந்து, பெற்றோர் விருப்பங்களை அறிந்து, அரசு முடிவை தெரிவிக்கும். இதற்கான பணி, முதல்வர் தலைமையில் நடந்து வருகிறது. மேல்நிலை வகுப்புகளுக்கு பாடப் புத்தகங்கள் வழங்கப்பட்டுள்ளன. அதேசமயம், ஒன்று முதல், 10ம் வகுப்பு வரை, படிப்படியாக பாடப் புத்தகங்கள் வழங்கப்படும்.
ஆக., முதல் வாரத்தில், எஸ்.எஸ்.எல்.சி., மதிப்பெண் சான்றிதழ் வழங்க, நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு, அவர் கூறினார்.
ஈரோடில், நேற்று அவர் கூறியதாவது: பள்ளிகள் திறப்பு குறித்து, மத்திய அரசு அறிக்கை கேட்டுள்ளது. வரும் மாதம் அல்லது செப்., மாதம் திறக்கலாமா என கேட்டுள்ளனர். தற்போது, கொரோனா பரவல், பல மாவட்டங்களில் அதிகமாக உள்ளது. எனவே, அதை கட்டுக்குள் கொண்டு வந்து, பெற்றோர் விருப்பங்களை அறிந்து, அரசு முடிவை தெரிவிக்கும். இதற்கான பணி, முதல்வர் தலைமையில் நடந்து வருகிறது. மேல்நிலை வகுப்புகளுக்கு பாடப் புத்தகங்கள் வழங்கப்பட்டுள்ளன. அதேசமயம், ஒன்று முதல், 10ம் வகுப்பு வரை, படிப்படியாக பாடப் புத்தகங்கள் வழங்கப்படும்.
ஆக., முதல் வாரத்தில், எஸ்.எஸ்.எல்.சி., மதிப்பெண் சான்றிதழ் வழங்க, நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு, அவர் கூறினார்.