பள்ளிக் கல்வித்துறை அலுவலகங்களில் நிர்வாகப் பணிகளை மேற்கொள்ளக் கூடாது!

பள்ளிக் கல்வித்துறை அலுவலகங்களில் அத்தியாவசியப் பணிகளை மட்டுமே மேற்கொள்ள வேண்டும் . நிர்வாகப் பணிகளை மேற்கொள் ளக் கூடாது என அறிவுறுத்தப் பட்டுள்ளது .
 பணியில் சேர வரும் ஆசிரியர்களை ...
கரோனா பாதிப்பின் காரண மாக மே 17 - ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது . அரசு அலுவலகங்கள் குறைந்தபட்ச ஊழியர்களுடன் , அத்தியாவசியப் பணிகளை மேற்கொள்ள தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது .
 
அதன்படி பள்ளிக்கல்வி மற்றும் அதன் மாவட்ட கல்வி அலுவலகங்க ளில் ஆசிரியர்கள் மற்றும் பணி யாளர்களுக்கு ஊதியம் வழங்கு தல் , ஓய்வு பெறுபவர்களை விடு வித்தல் , கரோனா தடுப்பு நட வடிக்கைகளுக்கு தேவையான வசதிகளை ஏற்படுத்தித் தரு தல் உட்பட முக்கியமான பணி கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அதேவேளையில் , சில மாவட்டங்களில் உள்ள கல்வி அலுவலகங்களில் தனியார் பள் ளிகளுக்கு அங்கீகாரம் நீட்டிப்பு உள்பட நிர்வாகப் பணிகள் செய்து வருவதாக கல்வித்துறை புகார்கள் வந்தன . இதையடுத்து பள்ளிக் கல்வி இயக்குநரகம் சார்பில் அனைத்து இணை இயக்குநர் , முதன்மை கல்வி அதிகாரிகள் , மாவட்ட மற்றும் வட்டாரக் கல்வி அதிகாரிகளுக்கு சில அறி வுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.
 
அதில் , ' ஊரடங்கு காலத் தில் அத்தியாவசிய பணிகளை தவிர வேறு நிர்வாகப் பணிகள் மேற்கொள்ள அனுமதியில்லை . அதை மீறி ஏதேனும் செயல் பாடுகளுக்கு அனுமதி அளித் தால் , அவை ரத்து செய்யப் பட்டு , சம்மந்தப்பட்ட அதிகா ரிகள் மீது துறை ரீதியான நட வடிக்கை எடுக்கப்படும் ' என்று கூறப்பட்டுள்ளது