புதுடில்லி: நாடு முழுவதும் மேலும் 2 வாரத்திற்கு ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக இந்தியாவில் முதன் முறையாக கடந்த மார்ச் மாதம் 25ம் தேதி முதல் 21 நாட்களுக்கு (ஏப்.14 வரை ) ஊரடங்கு உத்தரவு பிறப்பித்தது. இதனால் சாலை,விமானம் , ரயில் போக்கு வரத்து முடக்கப்பட்டது.
தொடர்ந்து இரண்டாம் கட்டமாக ஏப்., 14ம் தேதி முதல் மே மாதம் 3ம் தேதி வரையில் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது. வரும் 3 ம் தேதியுடன் முடிவடயை உள்ள நிலையில் பிரதமர் மோடி உள்துறை மற்றும் நிதித்துறை அமைச்சர் உள்ளிட்ட முக்கிய துறை அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
இதனிடையே இன்று மத்திய அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்படுள்ளதாவது:
வரும் 3 ம்தேதி முதல் 17 ம் தேதி வரையில் இரண்டு வாரங்களுக்கான ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. வழக்கம் போல் ரயில் விமானம் சாலை போக்குவரத்துக்கு தடை அமலில் இருக்கும் . மேலும் கல்வி நிறுவனங்கள் ஹோட்டல்கள் மூடப்படும். தனியார் நிறுவனங்கள் 33 சதவீத பணியாளர்களுடன் இயங்கலாம் என உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து மத்திய அரசு வரையறுத்துள்ள ஆரஞ்சு மற்றும் பச்சை மண்டலங்களில் ஊரடங்கு தளர்த்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக இந்தியாவில் முதன் முறையாக கடந்த மார்ச் மாதம் 25ம் தேதி முதல் 21 நாட்களுக்கு (ஏப்.14 வரை ) ஊரடங்கு உத்தரவு பிறப்பித்தது. இதனால் சாலை,விமானம் , ரயில் போக்கு வரத்து முடக்கப்பட்டது.
தொடர்ந்து இரண்டாம் கட்டமாக ஏப்., 14ம் தேதி முதல் மே மாதம் 3ம் தேதி வரையில் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது. வரும் 3 ம் தேதியுடன் முடிவடயை உள்ள நிலையில் பிரதமர் மோடி உள்துறை மற்றும் நிதித்துறை அமைச்சர் உள்ளிட்ட முக்கிய துறை அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
இதனிடையே இன்று மத்திய அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்படுள்ளதாவது:
வரும் 3 ம்தேதி முதல் 17 ம் தேதி வரையில் இரண்டு வாரங்களுக்கான ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. வழக்கம் போல் ரயில் விமானம் சாலை போக்குவரத்துக்கு தடை அமலில் இருக்கும் . மேலும் கல்வி நிறுவனங்கள் ஹோட்டல்கள் மூடப்படும். தனியார் நிறுவனங்கள் 33 சதவீத பணியாளர்களுடன் இயங்கலாம் என உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து மத்திய அரசு வரையறுத்துள்ள ஆரஞ்சு மற்றும் பச்சை மண்டலங்களில் ஊரடங்கு தளர்த்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.