8ம் வகுப்பு தனித்தேர்வு எப்போது?

சென்னை:பள்ளிகளில் படிக்காமல், தனியாக தேர்வு எழுதுவோருக்கான, 8ம் வகுப்பு தேர்வு, ஜூனில் நடத்தப்பட உள்ளது.


தமிழகத்தில், 9ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, மூன்றாம் பருவ தேர்வு நடத்தாமல், அனைவரும் தேர்ச்சி செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது; 10ம் வகுப்பு தேர்வு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.பிளஸ் 1 மாணவர்களுக்கு, ஒரு பாடத்துக்கு மட்டும் தேர்வு நடத்தப்பட உள்ளது.

அதேநேரத்தில், ஏப்ரலில் அறிவிக்கப்பட்ட, 8ம் வகுப்பு தனித்தேர்வு நடத்தப்படவில்லை. அதனால், தனித்தேர்வர்கள் குழப்பத்தில் இருந்தனர். இந்நிலையில், 'மே, 4ல், ஊரடங்கு தளர்த்தப்பட்டால், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 1 தேர்வுகள் முடிந்த பின், 8ம் வகுப்பு தனித் தேர்வு நடத்த வாய்ப்புள்ளது. 'அனேகமாக, ஜூனில் நடத்தப்படலாம்' என, பள்ளிக் கல்வி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.