ஆசிரியர்கள் உள்ளிட்ட மாநில அரசு ஊழியர்களுக்கு 4% அகவிலைப்படி வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
இது
தொடர்பாக அச்சங்கத்தின் மாநிலத் தலைவர் பிகே.இளமாறன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ''மத்திய அரசு ஊழியர்களுக்கு 4% அகவிலைப்படி அறிவிக்கப்பட்டுள்ளது. மாநில அரசின் கீழ் பணிபுரியும் ஆசிரியர்- அரசு ஊழியர்களுக்கும் 4% அகவிலைப் படியினை உயர்த்தி வழங்கிடக் கேட்டுக்கொள்கிறேன்.
அகவிலைப்படி, ஆறு மாதத்திற்கு ஒருமுறை விலைவாசி ஏற்றம்- இறக்கம் என்பதை அடிப்படையாகக் கொண்டு புள்ளியியல் அடிப்படையில் உயர்த்தி வழங்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் ஆசிரியர்-அரசு ஊழியர்கள், ஓய்வூதிய தாரர்கள், குடும்ப ஓய்வூதிய தாரர்கள் உள்ளிட்ட 18 லட்சம் ஆசிரியர்- அரசு ஊழியர்கள் குடும்பங்கள் என மொத்தம் ஒன்றரைக் கோடிப் பேர் பயன்பெறுவார்கள்.