மார்ச் 22 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று யாரும் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் - பிரதமர்!

22 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று யாரும் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம். அன்றையதினம் மக்கள் ஊரடங்கு கடைபிடிக்கப்படும். காலை 7 மணியிலிருந்து இரவு 9 மணி வரை யாரும் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம்: பிரதமர் மோடி
கொரோனா வைரஸ் குறித்து பிரதமர் மோடி உரை.
உலகப்போர்களை விட கொடியது கொரோனா
உலகம் மிகப்பெரிய அச்சுறுத்தலை சந்தித்து வருகிறது; கொரோனா வைரஸ் உலகப்போர் போல தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது- பிரதமர் மோடி.
 
இந்தியா மிக மன தைரியத்துடன் கொரோனாவை எதிர்த்து வருகிறது; ஒவ்வொரு இந்தியரும் இந்த ஆபத்தான சூழலில் விழிப்புடன் இருக்க வேண்டும்- பிரதமர் மோடி.
தற்போது கொரோனாவை விட முக்கிய பிரச்சினை ஏதும் இல்லை
கொரோனா தாக்குதலை எளிதாக எடுத்துக்கொள்ள முடியாது
உலக அளவில் பாதிக்கப்பட்ட இந்த தொற்றுக்கு இது வரை மருந்து கண்டு பிடிக்கபடவில்லை
மக்களை தனிமைபடுத்துவதன் மூலமே கொரானாவை கட்டுபடுத்த முடியும்.
 
2 ஆம் உலகப்போர்கூட இந்த அளவிற்கு பாதிப்பை ஏற்படுத்தவில்லை...
கொரோனா இந்தியாவை பாதிக்காது என்று தவறாக கணிக்க கூடாது...
65க்கும் அதிக வயதுடைய முதியவர்கள் வீட்டிலேயே தங்கியிருக்க வேண்டும் என பிரதமர் மோடி அறிவுரை