1575 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை முதுகலைப்பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களாக தரம் உயர்த்துதல் அறிவிப்பு!

பள்ளி மாணவர்களுக்காக பல்வேறு நலத் திட்டங்களை அரசு செயல்படுத்தி வருவதன் காரணமாக அரசு மேல்நிலைப் பள்ளிகளில் கூடுதல் மாணவர்கள் சேர்க்கை அதிகரித்துள்ளதை கவனத்தில் கொண்டு , மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் மாணாக்கர்களின் நலன் கருதி , 1575 பட்டதாரி ஆசிரியர்
பணியிடங்களை இதயதெய்வம் மாண்புமிகு அம்மா அவர்களின் நல்லாசியுடன் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைப்படி முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களாக ஆண்டு ஒன்றுக்கு ரூ . 1 . 11 கோடி கூடுதல் செலவில் தரம் உயர்த்தப்படும் .