அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான சம்பளம் வழங்கும் புதிய நடைமுறை ( IFHRMS) மார்ச் 1 முதல் அமல்!

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான சம்பளம் வழங்கும் புதிய நடைமுறை ( IFHRMS) மார்ச் 1 முதல் அமல்!
கருவூலக்கணக்குத்துறை மூலம் ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மை திட்டத்தினை முழுமையாக செயல்படுத்த அரசால் தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரப்பெறுகிறது .
 
வேலூர் மாவட்டத்தில் 01.03.2020 முதல் இத்திட்டம் முழுமையாக செயல்படுத்தப்படும் என்று கருவூலக்கணக்குத்துறை ஆணையர் அவர்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது . இப்பொருள் தொடர்பாக பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கு தொடர்ந்து கடிதங்கள் மூலமும் கூட்டங்கள் மூலமும் தகவல்கள் தெரிவிக்கப்பட்டு வருகிறது . மாவட்ட கருவூலத்திலும் சார் கருவூலங்களிலும் பயிற்சி அளிக்கப்பட்டு வரப்படுகிறது.
\\\