மஹாசிவராத்திரி - 21.02.2020 ( வெள்ளிக்கிழமை) உள்ளூர் விடுமுறை அறிவிப்பு.

1)கன்னியாகுமரி மாவட்டத்தில் மஹாசிவராத்திரி சிவாலய ஓட்டம் 21 .
02 . 2020 ( வெள்ளிக்கிழமை ) அன்று நடைபெறுவதால் 21 . 02 . 2020 ( வெள்ளிக்கிழமை ) அன்று கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள அனைத்து மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை வழங்கி உத்தரவிடப்பட்டுள்ளது .
 
( 2 ) 21 . 02 . 2020 அன்று அறிவிக்கப்பட்டுள்ள உள்ளூர் விடுமுறைக்கு ஈடாக 2020 மார்ச் திங்கள் நான்காவது சனிக்கிழமை ( 28 . 03 . 2019 ) அன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு வேலை நாளாக இருக்கும் .
( 3 ) 21 . 02 . 2020 அன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் தலைமைக் கருவூலம் மற்றும் கிளைக் கருவூலங்கள் அரசு ஈடுபாடு சம்பந்தப்பட்ட அவசரப் பணிகளைக் கவனிக்கும் பொருட்டு , தேவையான பணியாளர்களைக் கொண்டு இயங்கும் என கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித்தலைவர் திரு . பிரசாந்த் மு . வடநேரே , . . . , அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள் .