'டான்செட்' தேர்வு பதிவு துவங்கியது

சென்னை : அண்ணா பல்கலை மற்றும் தமிழக கல்லுாரி கல்வி இயக்ககத்தின் அனுமதி பெற்ற, இன்ஜினியரிங், மேலாண்மை கல்லுாரிகள், அரசு கல்லுாரிகள் மற்றும் அரசு
பல்கலைகளில், எம்.பி.ஏ., - எம்.சி.ஏ., - எம்.இ., - எம்.டெக்., - எம்.ஆர்க்., - எம்.பிளான்., ஆகியபடிப்புகள் உள்ளன.

இந்த படிப்புகளில் சேர, டான்செட் நுழைவு தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.தமிழக அரசின் உயர்கல்வி துறை சார்பில், அண்ணா பல்கலை வாயிலாக, டான்செட் தேர்வு நடத்தப்படுகிறது. வரும் கல்வி ஆண்டில், முதுநிலை படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்களுக்கு, பிப்., 29, மார்ச், 1ல், இந்த நுழைவு தேர்வு நடத்தப்படுகிறது. இந்த தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு, நேற்று துவங்கியது. ஜன., 31ல் பதிவு முடிகிறது. விபரங்களை அண்ணா பல்கலையின், https://tancet.annauniv.edu/tancet/ என்ற, இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். இந்த தகவலை, டான்செட் தேர்வு கமிட்டி செயலர் ஈஸ்வர குமார் தெரிவித்துள்ளார்.