தற்காலிக ஆசிரியர்கள் நியமனத்திற்கு தடை!

தற்காலிக ஆசிரியர்கள் நியமனம் தொடர்பாக அண்ணா பல்கலை பிறப்பித்த அறிவிப்பாணைக்கு தடை விதித்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடலூரை சேர்ந்த அருட்பெருஞ்ஜோதி என்ற தற்காலிக ஆசிரியர் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அண்ணா பல்கலை உறுப்பு கல்லூரிகளுக்கு தற்காலிக ஆசிரியர்கள் நியமிப்பது தொடர்பாக 2019 டிசம்பர் 19ல் அறிவிப்பாணை வெளியிடப்பட்டது.