பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 20.01.20

திருக்குறள்

அதிகாரம்:மெய்யுணர்தல்


திருக்குறள்:359

சார்புணர்ந்து சார்பு கெடஒழுகின் மற்றழித்துச்
சார்தரா சார்தரு நோய்.

விளக்கம்:

துன்பங்கள் நம்மைச் சாராமல் இருக்க வேண்டுமானால், அத்துன்பங்களுக்குக் காரணமானவற்றை உணர்ந்து அவற்றின் மீதுள்ள பற்றை விலக்கிக் கொள்ள வேண்டும்.

பழமொழி

 One step forward and two steps backward

  சாண் ஏறினால் முழம் சறுக்கும்.

இரண்டொழுக்க பண்புகள்

1. எனது பள்ளி வளாகத்தின் தூய்மை, பசுமை எனது படிப்பு எனது முக்கிய குறிக்கோள்கள்.

2. இந்த வருடம் முழுவதும் என் குறிக்கோள்கள் நிறைவேற பாடுபடுவேன்.

பொன்மொழி

விடாமுயற்சி என்பது பிடிவாதம் அல்ல.உண்மையில் விடாமுயற்சியே பல சாதனைகளை அரங்கேற்றம் செய்துள்ளது..

-------ருடால்ப் டீசல்

பொது அறிவு

1.இந்திய காடுகளின் அரசன் என்று குறிக்கப்படும் மரம் எது?

 தேக்கு மரம்




2. கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை திறக்கப்பட்ட ஆண்டு எது?

ஜனவரி 1,2000.

English words & meanings

Toxicology – study of poisons on living organisms and treatment .நச்சுப்பொருள்கள் பற்றிய அறிவியல் முறையிலான ஆய்வு.

 Telescopic - Related to telescope. தொலைநோக்கி சம்பந்தமான.

ஆரோக்ய வாழ்வு

வெங்காயம் மற்றும் பூண்டு இரண்டையும் அதிகமாக உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் மார்பகப் புற்றுநோய் ஏற்படுவதற்கான அபாயத்தை 67 சதவீதம் குறைக்க முடியும்.

Some important  abbreviations for students

Dr. - Doctor.   

Gen. - General

நீதிக்கதை

ஆட்டுக்குட்டி ஒன்று காட்டில் மேய்ந்து கொண்டு இருந்தது. பசுமையான இலை, கொடிகள் கண்ட இடங்களில் எல்லாம், தம் விருப்பம் போல் ஆசையுடன் மேய்ந்தது.

சிறிது நேரத்தில் ஆட்டுக் குட்டிக்குத் தண்ணீர் தாகம் எடுத்தது. சுற்றிலும் கிணறு இருந்தது. ஆனால் எங்கும் தண்ணீர் கிடைக்க வில்லை. தாகம் மிகவும் வாட்டி வதைத்தது.

இன்னும் சிறிது தூரம் தள்ளிச் சென்று பார்த்தது. ஓர் இடத்தில் பெரிய கிணறு இருந்தது. கிணற்றுச் சுவரின் மேல் ஏறி உள்ளே எட்டிப் பார்த்தது.கிணற்றின் உள்ளே சிறிது தண்ணீர் இருந்தது. சுவற்றின் ஓரத்தில் பசுமையான புற்களும் வளர்ந்திருந்தன. அதைக் கண்டவுடன் ஆட்டுக்குட்டி நமக்குக் குடிக்கத் தண்ணீர் கிடைத்து விட்டதே என நினைத்து, அத்துடன் தண்ணீரைச் சுற்றி இருக்கும் பசுமையான புல்லையும் சாப்பிடலாம் என எண்ணி மகிழ்ந்தது. ஆனால் நீர் குடித்து விட்டு அதனால் மேலே வர முடியவில்லை. பரிதாபமாக கத்தியது. அந்த வழியே ஒரு குரங்கு வந்தது. கிணற்றுக்குள் இருந்து ஆடு கத்தும் சத்தம் குரங்கின் காதில் விழுந்தது. என்ன எ‌ன்று‌ எட்டி பார்த்தது. ஆனால் குரங்கால் ஒன்றும் செய்ய முடியாத சூழ்நிலை, ஆட்டுக் குட்டியின் நிலை கண்டு பரிதாபப்பட்டது.ஆட்டுக் குட்டியே... எந்தக் காரியத்தை செய்யும் முன், யோசித்த பின் செய்ய வேண்டும்.   கிராமத்தினுள் சென்று துணைக்கு யாரையாவது அழைத்து வருகிறேன்...'' என்று கிராமத்திற்குள் சென்ற குரங்கு ஆட்களை அழைத்து வந்து ஆண்டின் காப்பாற்றியது.

நீதி: எந்த காரியத்தை செய்யும் முன் அதனால் ஏற்படும் சாதக, பாதகங்களை யோசிக்க வேண்டும்.

திங்கள்
தமிழ்

தூய தமிழ் சொற்கள் அறிவோம்

பாஷை  -  மொழி
பிரசாரம் - பரப்புரை
பூர்வம் - முந்தி
மரணம் - இறப்பு
மாமிசம் -  இறைச்சி

இன்றைய செய்திகள்

21.01.20

* குப்பைகளை அகற்றுவதில் தொடர்ந்து கடமை தவறும் உள்ளாட்சி அமைப்புகள் மாதம் ரூ.10 லட்சம் அபராதம் செலுத்த தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

* ஹைட்ரோ கார்பன் ஆய்வுக் கிணறு அமைக்க சுற்றுசூழல் அனுமதி தேவையில்லை: தனியார் நிறுவனத்துக்கு மத்திய அரசு தாராள சலுகை.

* வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் லேசான மழைக்கு வாய்ப்பு...: வானிலை ஆய்வு மையம் தகவல்.

* புரோ ஹாக்கி தொடரை வெற்றியுடன் துவக்கியது இந்தியா. நெதர்லாந்துக்கு எதிரான முதல் போட்டியில் 5-2 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது.

* ஆஸ்திரேலியாவுடனான 3-வது இறுதி ஒருநாள் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் ஒருநாள் தொடரையும் வென்று கோப்பையை கைப்பற்றியது.

Today's Headlines

🌸Local bodies that continue to fail to dispose the garbage will fined Rs 10 lakh per month - orders are given by the National Green Tribunal

 🌸No environmental permit required for hydrocarbon exploration well - Central government generous offer to private company.

 🌸 Meteorological Center says there may be mild  rain in tamilnadu due to atmospheric overlapping.

 🌸 India launches Pro Hockey Series with success  .In the first match against the Netherlands India won by 5-2.

 🌸 India had a tremendous victory by 7 wickets in the 3rd ODI against Australia and also won the series. India bagged the trophy.

Prepared by
Covai women ICT _போதிமரம்