தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 1,706 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் ரத்து: பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு

01.08.2018 நிலவரப்படி பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணியாளர் நிர்ணயம் மேற்கொள்ளப்பட்டதில் , பாடவாரியாக ஆசிரியரின்றி உபரி எனக் கண்டறியப்பட்ட பணியிடங்களை ( Surplus Post Without person ) இயக்குநரின் பொதுத் தொகுப்பிற்கு ஒப்படைக்க சார்ந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டிருந்தது .
அதனடிப்படையில் ஆசிரியரின்றி உள்ள உபரிக் காலிப்பணியிடங்களை ( Surplus Post Without Person ) பார்வை - 2ல் காணும் கடிதங்களின் வாயிலாக சார்ந்த முதன்மைக் கல்வி அலுவலர்களால் இயக்குநரின் பொதுத் தொகுப்பிற்கு சரண் செய்திட விவரங்கள் பெறப்பட்டுள்ளது .
இப்பணியிடங்களை இயக்குநரின் பொதுத் தொகுப்பிற்கு கொண்டுவரப்பட்டள்ளதால் அதனை ஏற்பளித்து ஆணை வழங்கப்படுகிறது . மேலும் இத்துடன் இணைக்கப்பட்டுள்ள பட்டியலில் உள்ள ( ஆசிரியரின்றி உள்ள உபரிப் பணியிடங்களை ) பணியிடங்களை வருங்காலங்களில் காலிப்பணியிடங்களாகவோ , அனுமதிக்கப்பட்ட பணியிடங்களாகவோ கருத கூடாது என அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது .
 
இது குறித்து சார்ந்த பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு கொண்டு சென்று அந்தந்த பள்ளிகளில் பராமரிக்கப்படும் அளவைப் பதிவேட்டில் ( Scale Register ) உரிய பதிவுகள் ( பள்ளிக் கல்வி இயக்குநர் பொதுத் தொகுப்புக்கு சரண் செய்யப்பட்டது என்ற பதிவினை ) மேற்கொள்ளும் வகையில் தக்க நடவடிக்கை மேற்கொள்ளமாறும் , அதனை அடுத்து வரும் தலைமை ஆசிரியர்கள் கூட்டத்தில் சரிபார்த்து உறுதி செய்து கொள்ளவும் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது .
CLICK HERE TO DOWNLOAD