மத்திய அரசு பணிகளுக்கு பொது தகுதி தேர்வு என்ற பெயரில் ஒரே தேர்வு நடத்த மத்திய அரசு திட்டம்


பெரும்பாலான மத்திய அரசு பணிகளுக்கு பொது தகுதி தேர்வு என்ற பெயரில் ஒரே தேர்வு நடத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதுஇதுகுறித்து மாநில அரசுகளிடம் கருத்து கேட்டுள்ளதுமத்திய பணியாளர் தேர்வாணையம் (யு.பி.எஸ்.சி.), சிவில் சர்வீசஸ் தேர்வுகளையும்குரூப்  மற்றும் குரூப் பி பணியிடங்களுக்கான தேர்வுகளையும் நடத்துகிறதுஎஸ்.எஸ்.சி எனப்படும் தேர்வாணையம்பெரும்பாலும் குரூப் பி பணியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்கிறதுஒவ்வொரு தேர்வுக்கும் தேர்வர்கள் தனித்தனியாக விண்ணப்பித்து தனித்தனியாக தேர்வு எழுத வேண்டி இருக்கிறதுஇதனால்பணமும்நேரமும் வீணாவதுடன்அலைச்சலும் ஏற்படுகிறதுஇதை கருத்திற்கொண்டுபொது தகுதி தேர்வு (சி..டி.) என்ற பெயரில் ஒரே தேர்வு மூலம் பெரும்பாலான மத்திய அரசு பணிகளுக்கு ஆட்களை தேர்வு செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளதுஇந்த தேர்வை ஒரே அமைப்பு நடத்தும்.
 
இதுகுறித்து மத்திய அமைச்சகங்கள் மற்றும் துறைகள்மாநிலயூனியன் பிரதேச அரசுகள்தேர்வர்கள் உள்ளிட்டோரிடம் மத்திய பணியாளர் நலத்துறை அமைச்சகம் கருத்து கேட்டுள்ளதுஒரு மாதத்துக்குள் கருத்து தெரிவிக்குமாறு கூறியுள்ளதுமத்திய அரசு மற்றும் அதன் நிறுவனங்களில் அரசிதழ் பதிவு பெறாத குரூப் பி பணியிடங்கள்குறிப்பிட்ட குரூப் பி பணியிடங்கள்குரூப் சி பணியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்ய பொது தகுதி தேர்வு நடத்தப்படும் என மத்திய பணியாளர் நலத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதுஇந்த தேர்வு நடத்த பிரத்யேகமான ஒரு அமைப்பு உருவாக்கப்படும்இதுஆன்லைன் தேர்வாக நடத்தப்படும்தற்போதுஅரசு வேலை பெற விரும்பும் விண்ணப்பதாரர்கள்பல்வேறு தேர்வாணையங்கள் நடத்தும் தனித்தனி தேர்வுகளை எழுத வேண்டி இருக்கிறதுஇவற்றுக்கு ஒரே மாதிரியான தகுதிகள்தான் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளனஇந்த தேர்வுகள் 3 அடுக்குகள் கொண்டதாகவும்திறனறி தேர்வு உள்ளிட்டவையும் அடங்கியதாக இருக்கும்ஆண்டுதோறும் சராசரியாக ஒரு லட்சத்து 25 ஆயிரம் பணியிடங்களுக்கு 2 கோடியே 50 லட்சம் பேர் எழுதி வருகிறார்கள்இவர்களுக்காகவே பொது தகுதி தேர்வு என்ற ஒரே தேர்வு அறிமுகம் செய்யப்படுகிறதுஇதனால் எண்ணற்ற தேர்வுகளை எழுத வேண்டிய சுமை நீங்குகிறதுவிண்ணப்ப கட்டண செலவுகளும்தேர்வு மையத்துக்கு செல்வதற்கான பயண செலவுகளும் குறைகிறது.
 
மாவட்டத்துக்கு குறைந்தபட்சம் ஒரு தேர்வு மையம் அமைய வாய்ப்பு இருப்பதால்கிராமப்புற மாணவர்கள் எளிதில் சென்றுவர வழிவகை ஏற்படும்தங்களுக்கு விருப்பமான தேர்வு மையத்தை அவர்கள் தேர்வு செய்ய முடியும்மேலும்ஆட்களை தேர்வு செய்யும் நடைமுறைக்கான கால அளவு குறைவதுடன்வேலைவாய்ப்பு உருவாக்கத்துக்கும் வழி வகுக்கும்இந்த தேர்வு எழுத ஆன்லைன் மூலம் விண்ணப்பதாரர்கள் பதிவு செய்து கொள்ளலாம்முதல்முறையாகபட்டதாரிகள், 12-ம் வகுப்பு தேறியவர்கள், 10-ம் வகுப்பு தேறியவர்கள் ஆகியோருக்கான தொழில்நுட்பம் சாராத பணியிடங்களுக்கு பொது தகுதி தேர்வு நடத்தப்படும்தற்போதுஇந்த தேர்வுகளை எஸ்.எஸ்.சி.யும்ரெயில்வே தேர்வு வாரியமும் நடத்தி வருகின்றன.

இந்த பொது தகுதி தேர்வில் எடுத்த மதிப்பெண்கள்ஒவ்வொரு விண்ணப்பதாரரிடம் தெரிவிப்பதுடன்தேர்வாணையத்திடமும் இருக்கும்இந்த மதிப்பெண்கள்தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து 3 ஆண்டுகளுக்கு செல்லும்இந்த மதிப்பெண்களை கூட்டிக்கொள்ள ஒவ்வொரு விண்ணப்பதாரரும் கூடுதலாக 2 தடவை பொது தகுதி தேர்வில் பங்கேற்கலாம்எந்த தேர்வில் அதிக மதிப்பெண் கிடைக்கிறதோஅதுவே அவரது உரிய மதிப்பெண்ணாக கருதப்படும்இந்த தகுதி மதிப்பெண்ணுடன்சம்பந்தப்பட்ட தேர்வாணையங்கள் தனியாக நடத்தும் தேர்வுகள் அடிப்படையில்ஆட்கள் இறுதியாக தேர்வு செய்யப்படுவர்இந்த தகுதி மதிப்பெண்களை பயன்படுத்திமாநில அரசுகள் தங்களுக்கு தேவையான ஆட்களை தேர்வு செய்து கொள்ளலாம்அதுபோல்மத்திய அரசின் பல்வேறு துறைகளும் பயன்படுத்திக் கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளதுமத்திய பணியாளர் நலத்துறை இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் இந்த தேர்வு முறைஎந்த பின்னணியும் இல்லாதவருக்கும் சம வாய்ப்பு அளிக்கும் எனவும் விண்ணப்பதாரருக்கும்தேர்வு அமைப்புக்கும் செலவை குறைக்கும் என்று கூறினார்.