சித்தா படிப்புக்கு நாளை கவுன்சிலிங்

சென்னை, சித்தா உள்ளிட்ட, இந்திய முறை மருத்துவ படிப்புகளுக்கான கவுன்சிலிங், நாளை துவங்குகிறது.இந்திய மருத்துவ முறை படிப்புகளான சித்தா, ஆயுர்வேதா,
யுனானி, ஓமியோபதி படிப்புகளுக்கு, ஐந்து அரசு மருத்துவக் கல்லுாரிகளில், மாநில ஒதுக்கீட்டுக்கு, 280 இடங்கள் உள்ளன. மேலும், 20 தனியார் மருத்துவக் கல்லுாரிகளில், மாநில அரசு ஒதுக்கீட்டுக்கு, 1,000 இடங்களும், நிர்வாக ஒதுக்கீட்டுக்கு, 500 இடங்களும் உள்ளன.

இந்தாண்டு முதல், 'நீட்' நுழைவு தேர்வு அடிப்படையில், மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது. இந்த படிப்புகளில் சேர, அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு, 1,600 பேரும், நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு, 700 பேரும் விண்ணப்பித்துள்ளனர்.இதற்கான தரவரிசை பட்டியல், www.tnhealth.org என்ற இணையதளத்தில், நேற்று முன்தினம் வெளியிடப்பட்டது. இதில், அரசு ஒதுக்கீட்டிற்கு, 1,423 பேரும், நிர்வாக ஒதுக்கீட்டிற்கு, 555 பேரும் தகுதி பெற்றுள்ளனர்.மாணவர் சேர்க்கை, சென்னை, அரும்பாக்கம், சித்தா அரசு மருத்துவமனை வளாகத்தில், நாளை துவங்குகிறது. இதில், அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு, நாளை முதல், 28ம் தேதி வரை, மாணவர் சேர்க்கை நடைபெறும். 28ம் தேதி பிற்பகல் முதல், 29ம் தேதி வரை, நிர்வாக ஒதுக்கீட்டு கவுன்சிலிங் நடைபெற உள்ளது.மேலும், விபரங்களை, www.tnhealth.org என்ற, இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.