தமிழக போக்குவரத்துத்துறை திருத்தப்பட்ட மோட்டார் வாகனச்சட்டத்தில் 18 வயதுக்கு கீழ் உள்ள பள்ளி மாணவ, மாணவிகள் வாகனம் ஓட்டினால், அவர்களின் பெற்ேறார்களுக்கு கடுமையான அபராதம் விதிக்கவும், மேலும் ஓட்டுநர் உரிமம் பெறவும் கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இது குறித்து சேலம் வட்டார போக்குவரத்துத்துறை அதிகாரிகள் கூறியதாவது: கடந்த 5 ஆண்டுகளை ஒப்பிட்டு பார்க்கையில் 18 வயதுக்கு கீழ் உள்ள சிறுவர், சிறுமிகள் இரு சக்கர வாகனம் ஓட்டுவது 15 சதவீதம் அதிகரித்துள்ளது. அதேபோல் கார் ஓட்டுவது 2 சதவீதம் அதிகரித்துள்ளது. வாகனத்தை இயக்கும்போது, போக்குவரத்து விதிமுறைகள் கட்டாயம் தெரிந்து இருக்க வேண்டும். அதற்காகத்தான் ஓட்டுநர் உரிமம் பெற பல்வேறு கட்டங்களில் பயிற்சி அளிக்கப்படுகிறது.
சில
பெற்றோர்கள் பெருமைக்காக சிறுவர், சிறுமியர்களிடம் வாகனத்தை கொடுத்துவிடுகின்றனர். அவர்கள் 80 கிலோமீட்டர் வேகத்தில் வாகனத்தை ஓட்டிச்செல்கின்றனர். ஒரே வாகனத்தில் இரண்டு அல்லது மூன்று பேரை அமர்த்திக்கொண்டு வேகமாக ஓட்டுகின்றனர். இதன் காரணமாக பின்னால் வருபவர்கள் விபத்தில் சிக்கி கொள்கின்றனர்.