மதிப்பெண் சான்றிதழ் வினியோகம்

சென்னை:பத்தாம் வகுப்பு சிறப்பு தேர்வு எழுதியவர்களுக்கு, நாளை, அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படுகிறது.

அரசு தேர்வு துறை இயக்குனர், உஷா ராணி வெளியிட்ட செய்திக் குறிப்பு:பத்தாம் வகுப்பு சிறப்பு துணை பொது தேர்வு, ஜூனில் நடத்தப்பட்டது. இந்த தேர்வு முடிவுகள், ஏற்கனவே அறிவிக்கப்பட்டு, தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வினியோகிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில், ஜூனில் தேர்வு எழுதியவர்களுக்கு, அசல் மதிப்பெண் சான்றிதழ்கள், தேர்வு மையங்களில், நாளை வழங்கப்படும்.மறுகூட்டலுக்கு விண்ணப்பித்தவர்களில், மதிப்பெண் மாறியவர்களுக்கு மட்டும், 27ம் தேதி மதிப்பெண் சான்றிதழ்களை, தேர்வு மையங்களில் பெறலாம்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.