முதுநிலை இன்ஜி., படிப்பு 27ல் 'கவுன்சிலிங்' துவக்கம்

சென்னை, தமிழக இன்ஜினியரிங் கல்லுாரிகளில் முதுநிலை இன்ஜி. படிப்புக்கான
மாணவர் சேர்க்கை 'கவுன்சிலிங்' ஆக. 27ம் தேதி துவங்கும் என அண்ணா பல்கலை அறிவித்துள்ளது.இன்ஜினியரிங் முடித்தோர் எம்.இ. - எம்.டெக். - எம்.ஆர்க். - எம்.பிளான். ஆகிய முதுநிலை இன்ஜி. படிப்புகளில் சேர 'டான்செட்' நுழைவு தேர்வு நடத்தப்படுகிறது.இந்த தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களும் தேசிய அளவில் நடத்தப்படும் 'கேட்' நுழைவு தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களும் முதுநிலை இன்ஜி. படிப்பில் சேரலாம்.தமிழகத்தில் அண்ணா பல்கலையின் இணைப்பில் உள்ள கல்லுாரிகளில் முதுநிலை படிப்புக்கான மாணவர் சேர்க்கை கவுன்சிலிங் 27ம் தேதி துவங்க உள்ளது. இதற்கான தரவரிசை பட்டியல் இன்று வெளியிடப்படுகிறது.கேட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு 27ம் தேதி கவுன்சிலிங் நடக்கும். டான்செட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு 28ம் தேதி கவுன்சிலிங் துவங்கும் என அண்ணா பல்கலை அறிவித்துள்ளது.