அரசு
பள்ளி மாணவர்கள் ஆங்கிலம் சரளமாக பேசும் வகையில் விரைவில் 2000 ஆங்கில வார்த்தைகளை கொண்ட சிடி வழங்கப்படும் என்று தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், "மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கப்பட்டு வருகிறது. ஆசிரியர்களுக்கும் மடிக்கணினி வழங்கும் பணியும் நடைபெற்று வருகிறது. க்யூ.ஆர் மூலமாக மாணவ, மாணவிகள் கல்வி பயிலும் திட்டம் இந்தியாவிலேயே முதல் முறையாக தமிழகத்தில் தொடங்கப்பட்டுள்ளது.