அரசுப் பள்ளி ஆசிரியர்களின் கற்பித்தல் திறனை ஆய்வு செய்ய தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு.

*தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு*


 அரசுப் பள்ளி ஆசிரியர்களின் கற்பித்தல் திறனை ஆய்வு செய்ய தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு.

தமிழகத்தில் உள்ள அனைத்து ஆசிரியர்களின் கற்பித்தல் திறனை ஆய்வு செய்ய குழு அமைக்க நீதிமன்றம் ஆணை.

அனைத்து அரசு பள்ளி மாணவர்களின் கற்றல் திறன் குறித்தும் ஆய்வு செய்ய நீதிபதி பள்ளிக் கல்வித் துறை செயலருக்கு ஐகோர்ட் ஆணை.

புதுக்கோட்டையை சேர்ந்த ஆசிரியை சௌபாக்கியவதி தொடர்ந்த வழக்கில் உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி எம்.எஸ்.சுப்ரமணியன் உத்தரவு .

ஆசிரியர்களின் கற்பித்தல் திறனை ஆய்வு செய்ய முதன்மை கல்வி அலுவலர் தலைமையில் சிறப்புக் குழு அமைக்க வேண்டும்.

ஆசிரியர் பணி புனிதமானது; ஆசிரியர்களுக்கு பொறுப்புகளும் கடமைகளும் அதிகம் - உயர்நீதிமன்றம் கருத்து.