5 ஆண்டு சட்ட படிப்பு தரவரிசை அறிவிப்பு

சென்னை:அரசு சட்ட கல்லுாரிகளில், ஐந்தாண்டு, எல்.எல்.பி., படிப்புக்கு, தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.


தமிழகத்தில் உள்ள அரசு சட்ட கல்லுாரிகளில், எல்.எல்.பி., ஐந்தாண்டு படிப்புக்கு, ஏற்கனவே விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இதைத் தொடர்ந்து, 'கட் - ஆப்' மற்றும் தரவரிசை பட்டியலை, தமிழ்நாடு அம்பேத்கர் சட்ட பல்கலை வெளியிட்டுள்ளது.இந்த பட்டியலின்படி, மாணவர் சேர்க்கைக்கான கவுன்சிலிங் தேதியும் அறிவிக்கப்பட்டுள்ளது. வரும், 6ம் தேதி கவுன்சிலிங் துவங்கி, 11ம் தேதி வரையிலும் நடக்கிறது.
இந்த முறை, தொழிற்கல்வி மாணவர்களுக்கும், 4 சதவீத இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. தரவரிசை பட்டியலில் இடம் பெற்றவர்களுக்கு, கவுன்சிலிங்கில் பங்கேற்பதற்கான கடிதம், பல்கலையில் இருந்து அனுப்பப்பட்டுள்ளது.கடிதம் கிடைக்காதவர்கள், சட்ட பல்கலை வெளியிட்ட, கட் - ஆப் மதிப்பெண்ணுக்குள் இருந்தால், அந்த, கட் - ஆப் மதிப்பெண்ணுக்கு உரியவர்களுக்கு, கவுன்சிலிங் நடத்தப்படும் நாளில், பல்கலைக்கு நேரடியாக வந்து கவுன்சிலிங்கில் பங்கேற்கலாம் என, சட்ட பல்கலை அறிவித்துள்ளது.