பி.டி.எஸ்., கவுன்சிலிங் 172 இடங்கள் நிரம்பின

சென்னை, தனியார் மருத்துவ கல்லுாரிகளில் அரசு ஒதுக்கீட்டில் நேற்று 172 இடங்கள் நேற்று நிரம்பின.தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லுாரிகளில் அரசு
ஒதுக்கீட்டுக்கு 1070 பி.டி.எஸ். இடங்கள் உள்ளன. ஏற்கனவே சென்னை அரசு பல் மருத்துவ கல்லுாரியில் மாநில அரசு ஒதுக்கீட்டில் உள்ள 85 இடங்களும் நிரம்பின.தனியார் மருத்துவ கல்லுாரிகளில் அரசு ஒதுக்கீட்டில் 234 இடங்கள் நிரம்பின. மீதமுள்ள 751 இடங்களுக்கான கவுன்சிலிங் ஒமந்துாரார் அரசு பல்நோக்கு மருத்துவமனை வளாகத்தில் நேற்று துவங்கியது.கவுன்சிலிங்கில் பங்கேற்க 1660 மாணவர்கள் அழைக்கப்பட்ட நிலையில் 253 பேர் தான் பங்கேற்றனர். அவர்களில் 172 பேருக்கு பி.டி.எஸ். இடங்கள் ஒதுக்கப்பட்டன. பொதுப்பிரிவினருக்கான கவுன்சிலிங் இன்று நடைபெறுகிறது.