இன்ஜினியரிங் கவுன்சிலிங் நாளை துவக்கம்

சென்னை:இன்ஜினியரிங் படிப்புக்கான, தமிழக அரசின் கவுன்சிலிங், நாளை துவங்க உள்ளது.
பிளஸ் 2 முடித்து, இன்ஜினியரிங் படிப்பில் சேர விரும்பும் மாணவர்களுக்கு, தமிழக உயர்
கல்வித் துறை சார்பில், கவுன்சிலிங் நடத்தப்படுகிறது. இதற்கான, 'ஆன்லைன்' பதிவில், 1.33 லட்சம் பேர் விண்ணப்பித்தனர். அவர்களில், 1.03 லட்சம் பேர், சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்ட பின், தரவரிசை பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.இவர்களுக்கான கவுன்சிலிங், நாளை துவங்குகிறது. முதலில், மாற்றுத் திறனாளிகளுக்கும், நாளை மறுநாள், முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுகளுக்கும், நேரடி கவுன்சிலிங் நடக்கிறது. வரும், 27ல், விளையாட்டுப் பிரிவுக்கு ஒதுக்கீடு செய்யப்பட உள்ளது.
அதேபோல, தொழிற்கல்வி மாணவர்களுக்கு, 26 முதல், 28ம் தேதி வரை கவுன்சிலிங் நடக்கிறது. பொதுப் பிரிவு மாணவர்களுக்கு, ஜூலை, 3 முதல் ஆன்லைன் கவுன்சிலிங். இது தொடர்பான தகவல்களை, மாநிலம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள, இன்ஜினியரிங் கவுன்சிலிங் உதவி மையங்களில் பெறலாம். மேலும், https://tneaonline.in என்ற, இணையதளத்திலும் தெரிந்து கொள்ளலாம்.