நல்லாசிரியர் விருதுக்கு அவகாசம் நீட்டிப்பு

சென்னை:தேசிய நல்லாசிரியர் விருதுக்கு விண்ணப்பிக்க, 19ம் தேதி வரை, அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பணியாற்றும், ஆசிரியர்களின் செயல்திறனுக்கு ஏற்ப, மத்திய அரசின் சார்பில், நல்லாசிரியர் விருது வழங்கப்படுகிறது. இந்த ஆண்டுக்கான விருதுக்கு, ஆன்லைனில் ஆசிரியர்கள், விண்ணப்பிக்கலாம் என, ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான கடைசி தேதி, 15ம் தேதி முடிவதாக இருந்தது.இந்நிலையில், விண்ணப்பிப்பதற்கான அவகாசம், 19ம் தேதி வரை நீட்டிக்கப் பட்டுள்ளது. இது குறித்து, அனைத்து ஆசிரியர்களுக்கும் தெரியப்படுத்தி, தகுதியானவர்களை விண்ணப்பிக்க செய்யுமாறு, மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கு, பள்ளி கல்வி இயக்குனர், ராமேஸ்வர முருகன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.