நாளை முதல் சட்டப்படிப்பிற்கான விண்ணப்பங்கள்

சென்னை, ஜூன் 27-தமிழ்நாடு அம்பேத்கர் சட்ட பல்கலையின் இணைப்பில் உள்ள, 12 சட்ட கல்லுாரிகளில், மூன்றாண்டு சட்ட படிப்பில் சேர்வதற்கு, நாளை முதல்
விண்ணப்பங்கள் வினியோகம் செய்யப்படுகின்றன. சட்ட பல்கலை மற்றும் அந்தந்த சட்ட கல்லுாரிகளில் விண்ணப்பங்களை பெறலாம்.இதற்கிடையில், சட்ட பல்கலையில், சீர்மிகு சட்ட கல்லுாரியின், இரண்டாம் கட்ட கவுன்சிலிங்குக்கான, 'கட் ஆப்' பட்டியல் மற்றும் கவுன்சிலிங் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.விபரங்களை,www.tndalu.ac.inஎன்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.