பொது தேர்வு முறையில் மாற்றமா?

சென்னை:பொதுத்தேர்வு முறையில், மாற்றம் செய்வது குறித்து, பள்ளி கல்வித்துறை ஆலோசனை நடத்தி வருகிறது.

தமிழகத்தில், பிளஸ் 1, பிளஸ் 2 மற்றும், 10ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படுகிறது. அதேபோல், எட்டாம் வகுப்புக்கும் பொதுத்தேர்வு நடத்தலாம் என, மத்திய அரசு பரிந்துரைத்தது. இதுகுறித்து,'பொது மக்களின் கருத்து கேட்கப்படும்' என,பள்ளி கல்விஅமைச்சர், செங்கோட்டையன் அறிவித்திருந்தார்.அது குறித்தும், கணிதம், அறிவியல், தொழிற்கல்வி, கலைப்பாட பிரிவுகள் மற்றும் அதற்கான தேர்வு முறைகளில் மாற்றம் கொண்டு வருவது குறித்தும், பள்ளி கல்வித்துறை ஆலோசனை நடத்தி வருவதாக, தகவல்கள் வெளியாகியுள்ளன.